ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை வரலாறு - ஒரு பார்வை!!

1. ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்.

2. இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

3. கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை.

4. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.

5. இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான்.

6. இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான்.

பண்டிகையின் சிறப்பு!!!

1. வைணவ இறையியலில், இரண்யகசிபு அசுர்ர்களின் அரசன்.

2. இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை.

3. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது.

4. இவ்வரத்தின்படி இவனை இரவிலோ பகலிலோ வீட்டிலோ வெளியிலோ மண்ணிலோ விண்ணிலோ விலங்காலோ மனிதனாலோநடைமுறையாலோ கோட்பாட்டாலோ கொல்ல இயலாது.

5. இதனால் இவன் செருக்கு மிகுந்து வானகத்தையும் மண்ணகத்தையும் போரிட்டு வென்றான்.

6. எவரும் கடவுளைத் தொழாமாமல் தன்னை வழிபடவேண்டும் என ஆணையிட்டான்.

7. இருந்தாலும் இவனது மகன் பிரகல்லாதனே திருமாலின் பற்றாளன் (பக்தன்).

8. இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகல்லாதன் திருமலை வழிபட்டு வந்தான்.

9. பிரகல்லாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது.

10. யானைகளால் தக்கியபோதும் காயமில்லத காயத்தோடு விளங்கினான்.

11. பாம்புகளுக்கு இடையில் பசியோடு ஓரறையில் தனியாக அடைத்தபோதும் உயிர்வாழ்ந்தான்.

12. தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன.

13. இறுதியாக, பிரகல்லாதனை அவனது தங்கை மடியில் அமரச் செய்து தீயில் இறுத்த ஆணையிட்டான்.

14. அவள் தீயில் காப்பாக வாழும் துப்பட்டாவை அணிந்தவள்.

15. இதை பிரகல்லாதன் எற்று தனக்கு ஓர் ஊறும் நேராவண்ணம் காத்திடுமாறு திருமாலை வழிபட்டுத் தப்பினான்.

16. தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பரகல்லாதனை மூடவே, அவள் தீயில் மடிய, பிரகல்லாதன் மட்டுமே தப்பிப் பிழைத்த காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர்.

17. தங்கை ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.